அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் காலை 8.31 மணியளவில் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-10-11 19:41 IST

இடாநகர்,

அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கமெங் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.31 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.52 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்