உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் இன்று இரவு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
உத்தரகாண்டின் சமோலி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 6.47 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது
5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.50 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.34 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.