கர்நாடகத்தில் பயணிகள் நிழற்குடை மீது அரசு பஸ் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
பயணிகள் நிழற்குடை மீது பஸ் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து காசர்கோடு வரை சென்று கொண்டிருந்த அரசு பஸ், தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள தலபாடி அருகே வந்தபோது திடீரென பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பஸ் அங்கிருந்த பயணிகள் நிழற்குடை மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.