மும்பை விமான நிலையத்தில் ரூ.5.11 கோடி கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 5.119 கிலோ உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update:2025-06-29 21:21 IST

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் கஞ்சா கடத்தல் குறித்து சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மும்பை விமான நிலைய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இந்தியர் ஒருவர், இண்டிகோ விமானத்தில் கடந்த ஜூன் 27-ம் தேதி அன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது அவர், கொண்டுவந்த உடைமைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.5.11 கோடி மதிப்புள்ள (5.119 கிலோ) உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்த உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்