‘வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது' - ராஜ்நாத் சிங்
இந்தியாவின் பாதுகாப்புத் துறை வேகமாக வளர்ந்துள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது. மக்கள் பணத்தை செலவு செய்யாமல் இருப்பில் வைத்திருக்கும் வரை, வர்த்தக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் வரை, பொருளாதாரத்திற்குத் தேவையான வேகத்தை நம்மால் அடைய முடியாது.
இந்தியாவை ஒரு வலிமையான நாடாக மாற்றவும், அதன் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்தவும், வறுமை மற்றும் வேலையின்மையை தீர்க்கவும் விரும்பினால், நாம் உள்நாட்டு உற்பத்தியின் பாதையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் வணிகர்கள், மனித உடலில் உள்ள நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களைப் போன்றவர்கள். வணிகம் நின்றுவிட்டால், முழு பொருளாதார அமைப்பும் நின்றுவிடும். வர்த்தகம் எப்போதும் தொடர வேண்டும்.
முன்பு பாதுகாப்புத் துறையில் நாம் கிட்டத்தட்ட அனைத்தையும் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை வேகமாக வளர்ந்துள்ளது. ராணுவ உபகரணங்களின் இறக்குமதி மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்கின்றன. அதேசமயம், முன்பு, சிறிய பொருட்கள் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. நான் பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவியேற்றபோது, மொத்த உற்பத்தி சுமார் ரூ.45,000-46,000 கோடியாக இருந்தது. இப்போது, உற்பத்தி கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.