மாந்தோப்பில் சிறுமி - இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு; அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-11-02 20:17 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிஜினூர் மாவட்டம் டாராநகர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் நிகில் (வயது 19). இவர் பக்கத்து வீட்டில் சஞ்சல் (வயது 15) என்ற சிறுமி வசித்து வந்தார். நிகிலும், சிறுமி சஞ்சலும் காதலித்து வந்துள்ளனர். இருவரது காதலுக்கும் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி நிகிலும், சஞ்சலும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிஜினூர் - சந்பூர் சாலையில் லஹிவாலா கிராமத்திற்கு அருகே உள்ள மாந்தோப்பிற்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு காதல் ஜோடி இருவரும் மாந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இருவரும் மாயமானது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் மாந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் சடலமாக இன்று மீட்கப்பட்டனர். இதையடுத்து, இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்