3 குழந்தைகளுடன் கால்வாயில் குதித்து பெண் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

ரீனா மற்றும் 3 குழந்தைகள் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டனர்.;

Update:2025-08-10 14:44 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் ரைசுரா கிராமத்தை சேர்ந்தவர் அகிலேஷ். இவரது மனைவி ரீனா. இந்த தம்பதிக்கு ஹிமன்ஷு (வயது 9), அன்ஷி (வயது 5), பிரின்ஸ் (வயது 3) என 3 பிள்ளைகள் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அகிலேசுக்கும் அவரது மனைவி ரீனாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ரீனா வெள்ளிக்கிழமை இரவு 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

கிராமத்திற்கு அருகே பாயும் கால்வாய்க்கு சென்ற ரீனா தனது 3 குழந்தைகளையும் உடலில் சேர்த்து கட்டிக்கொண்டு கால்வாயில் குதித்தார்.

காலை வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லாததை அறிந்த அகிலேஷ் உடனடியாக உறவினர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்த உறவினர்கள் கால்வாய் அருகே ரீனாவின் வளையல், செருப்பு உள்ளிட்ட உடைமைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், விரைந்து வந்த போலீசார் சுமார் 4 மணிநேரம் தீவிர தேடுதல் நடத்திய நிலையில் ரீனா மற்றும் 3 குழந்தைகள் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டனர்.

4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்