ரூ.2000 கோடி மதிப்பில் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலம்

மும்பை கோட்டை அலுவலகத்தில் ஆகஸ்ட் 19 -ந்தேதி இந்திய ரிசர்வ் வங்கியால் ஏலம் நடத்தப்படும்.;

Update:2025-08-14 19:33 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2000 கோடி மதிப்பில் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1000 கோடி மற்றும் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஆகஸ்ட் 19, 2025 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஆகஸ்ட் 19, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்