சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 19 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று காலை 11.35, மதியம் 1.40, 3.5 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15, 3.45, 5 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து காலை 10.15 மதியம் 12.190 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15, மாலை 3.10, மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.40, 3.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரெயில்கள்
சென்னை சென்டிரல்-பொன்னேரி காலை 11.35, மதியம் 1.40 மாலை 3.5 மணி.
பொன்னேரி-சென்னை சென்டிரல் மதியம் 1.18, 2.48 மாலை 3.33, 4.3, 5.18 மணி.
சென்னை கடற்கரை-பொன்னேரி- மதியம் 12.40, 2.40, மாலை 3.45 மணி.
பொன்னேரி-சென்னை கடற்கரை மாலை 4.47 மணி.
கும்மிடிப்பூண்டி-சென்னை சென்டிரல்- மதியம் 12.5 மணி.
சூலூர்பேட்டை- சென்னை சென்டிரல்- மாலை 4.30 மணி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.