கட்டிலில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் உறவினர் வீட்டில் விளையாடியபோது கட்டிலில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.;

Update:2025-05-08 22:36 IST

கோப்புப்படம் 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த விளாக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றனி ரமேஷ் (45 வயது). இவர் காங்கரை பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். எய்டன் நினோ (4 வயது) என்ற மகனும் இருந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சிறுவன் எய்டன் நினோ புத்தன்கடை ஆர்.சி. தெருவில் உள்ள உறவினர் வீட்டில் கட்டிலில் ஏறி விளையாடி கொண்டிருந்தான். அப்போது தவறி கீழே விழுந்தான். இதில் மயக்கமடைந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்