இந்தியாவில் நடப்பாண்டில் இதுவரை 42 ரேபிஸ் தொற்று மரணங்கள் - மத்திய அரசு தகவல்

செப்டம்பர் 1-ந்தேதி வரை நாட்டில் 45.50 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-08 00:51 IST

சென்னை,

வாணியம்பாடி நகராட்சி கவுன்சிலர் முகமது நவ்மன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய அரசின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு மையம் பதிலளித்துள்ளது. அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 13 ஆக இருந்த ரேபிஸ் தொற்று மரணங்கள், 2025-ம் ஆண்டின் 9 மாதங்களில் 42 ஆக அதிகரித்துள்ளது. 2024 ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ந்தேதி வரை நாட்டில் 45.50 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 6.05 லட்சம் சம்பவங்கள் நடந்துள்ளன.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்