தி.மு.க.வை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்- நயினார் நாகேந்திரன்
தி.மு.க. அரசு அகற்றப்பட ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்;
மதுரை,
மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேரவேண்டும். கருத்துவேறுபாடுகள், விமர்சனங்கள் வெவ்வேறாக இருக்கலாம். உங்கள் கருத்து ஒன்றாக இருக்கும், எங்கள் கருத்து ஒன்றாக இருக்கும்.ஆனால் தி.மு.க. அரசு அகற்றப்பட ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். எனவே ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்.
கூட்டணியை பொறுத்தவரையில் சட்டமன்ற தேர்தலில் எண்ணிக்கை என்பது முக்கியமல்ல, எண்ணம்தான் முக்கியம். தமிழகம் முழுவதும் விரைவில் வேல் யாத்திரை, அண்ணாமலை நடைபயணம் போல சட்டமன்ற உறுப்பினர்களுடன் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.