திருப்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update:2025-02-06 10:27 IST

திருப்பூர்,

திருப்பூர் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் பேருந்து கவிழந்த விபத்தில்  2 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் . காயமடைந்த பயணிகள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . 

Tags:    

மேலும் செய்திகள்