கொடியேற்றத்துடன் தொடங்கும் சித்திரை திருவிழா

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.;

Update:2025-04-24 10:02 IST

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 10-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள வீதி உலா நடைபெறுகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 8-ம் தேதி திருக்கல்யாணம், மே 9-ல் தேரோட்டம் நடக்கிறது. மே 10-ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்