கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்;
சென்னை,
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகாங்களுக்கான மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, தமிழ்நாட்டில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திட தகுந்த அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்க பிரதமர் மோடிக்கு , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார் .
அந்த கடிதத்தில், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரெயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அதிக அளவிலான தனிநபர் வாகனங்களைக் கொண்டும். நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வரும் நிலையில் அனைத்து வகையிலும் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பெரும்நகரங்களில் அதிக திறன் கொண்ட பொது போக்குவரத்து மாற்றுகள் தேவைப்படுகிறது.
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ இரயில்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளைதயாரித்து அதை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்ததாகக் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தகுதியின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது. கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை நிராகரித்திருப்பது. அந்த இரண்டு பெருநகரங்களில் வாழும் மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த எங்களது கோரிக்கையை நிராகரித்தது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இரண்டு மாநகரங்களில் வசிக்கும் மக்களிடையே மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளதுள்ளார்.
ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள காரணங்கள் பொருத்தமற்றவை என்றும். மெட்ரோ ரெயில் கொள்கை 2017-ல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, 20 லட்சம் மக்கள் தொகை என்ற அளவுகோல் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின்படி அதன் மக்கள் தொகை 2011-ஆம் ஆண்டிலேயே 20 லட்சத்தைத் தாண்டியிருந்தது . மதுரையிலும் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும். இந்த 20 லட்சம் என்ற அளவுகோல் ஒரேமாதிரியாகக் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தால் ஆக்ரா, இந்தூர் மற்றும் பாட்னா போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ திட்டம் நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை
இந்த அளவுகோலை கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டப் பணிகளுக்குச் சுட்டிக்காட்டுவது என்பது. இந்த நகரங்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் பாகுபாட்டு நிலையையே காட்டுவதாகவும். எனவே ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களில் மேலே குறிப்பிடப்பட்ட நகரங்களில் மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்திட மேற்கொண்ட முடிவினைப் போன்று தமிழ்நாட்டிலுள்ள இந்த மாநகரங்களிலும் செயல்படுத்திட ஏதுவாக இந்த அளவுகோலை நீக்க வேண்டும்.
மேலும், கோயம்புத்தூர் நகரில் இந்தத் திட்டத்திற்கான பயணிகளின் அடர்வு எண்ணிக்கை சென்னையில் உள்ள பயணிகளின் அடர்வு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை என்பது பல காரணிகளைச் சார்ந்திருப்பதால் இது பொருத்தமானதல்ல.
இந்த இரண்டு நகரங்களும் சென்னையிலிருந்து வேறுபட்ட பயண முறைகளைக் கொண்டுள்ளன என்றும் விரிவான போக்குவரத்து ஆய்வுகளுக்குப் பிறகு RITES தயாரித்த கோயம்புத்தூருக்கான விரிவான இயக்கத் திட்டம் முன்மொழியப்பட்ட துறைகளில் மெட்ரோ பயணத்தின் தேவையைத் தெளிவாகக் கணித்துள்ளது.
மதுரைக்கும் 2011-ஆம் ஆண்டின் விரிவான இயக்கத் திட்டத்தில், பொதுப் போக்குவரத்து அமைப்பு (BRT) முன்மொழியப்பட்டதாகவும் ஆனால் பெரும்பாலான பாதைகளின் நீளம் உயர்த்தப்பட வேண்டியிருப்பதால். இரயில் போக்குவரத்திற்கான அமைப்பையும் பரிசீலிக்கலாம்.
மேலும், விரிவான திட்ட அறிக்கை ஆய்வுகள் போக்குவரத்து கணிப்புகளின் அடுத்தடுத்த தனிப்பட்ட மதிப்பீடுகளைச் செய்துள்ளன என்றும். இது மெட்ரோ வழித்தடங்களின் தேவையை நியாயப்படுத்தியது என்றும். இந்தக் காரணிகள் போதுமான அளவு கருத்தில் கொள்ளப்படவில்லை.
மெட்ரோ வழித்தட உரிமையைப் பொறுத்தவரை. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் இத்திட்டங்களுக்குத் தனியார் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.
கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் முன்மொழியப்பட்ட மெட்ரோ திட்டங்களுக்கு நிலம் கிடைப்பது என்பது ஒரு தடையாக இருக்காது என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்,
இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் எழுப்பியுள்ள ஐயங்களுக்கு உரிய விரிவான விளக்கங்களைச் சமர்ப்பிக்க சிறப்பு முயற்சிகள் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்கான கருத்துருவைத் திருப்பியனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளதுடன் தேவைப்படின் இத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க தமது குழுவுடன் புதுடெல்லியில் இந்திய பிரதமர் அவர்களை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.