வேகமெடுக்கும் கொரோனா.. இந்தியாவில் 1,000 பேர் தொற்றால் பாதிப்பு!

மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;

Update:2025-05-27 06:21 IST

புதுடெல்லி,

தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, மே 26 காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 1,009 பேருக்கு கொரனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கும் தமிழ்நாட்டில் 69 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீண்டும் பரவி வரும் கொரனோ பாதிப்பு காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், இது வீரியம் குறைந்த கொரோனா பரவல் என்றும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்