கரூர் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது: எடப்பாடி பழனிசாமி

கரூர் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;

Update:2025-09-27 22:30 IST

கரூர்,

கரூர் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தவெக கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். முழு விவரங்கள் தெரிந்த பிறகு நான் உங்களிடம் பேசுகிறேன்” என்றார். இதற்கிடையே தனது தருமபரி சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்