6வது நாளாக தொடரும் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்

வேலை நிறுத்த போராட்டத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.;

Update:2025-10-14 10:54 IST

சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளின் 2025-2030-ம் ஆண்டுக்கான புதிய டெண்டரில் 3,500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவை என எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

எனவே 2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்கக்கோரி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எண்ணெய் நிறுவனங்கள் , கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்நிலையில், சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்த போராட்டத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளை, கியாஸ் டேங்கர் லாரிகள் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், லாரிகளை உடனடியாக இயக்க உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் எண்ணெய் நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்