”இல்லந்தோறும் அமைதி பெருக...” - விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
த.வெ.க. தலைவர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெய்ந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”இல்லங்கள் தோறும் அமைதி, வளம் பெருக , மகிழ்ச்சியுடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.