மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update:2025-06-03 16:08 IST

தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் நாளை (4.6.2025) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, எட்டயாபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சத்திரம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி.ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இன்னாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணா புரம், சுந்தரவேல் புரம், அம்பேத்கார் நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி.மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பர நகர், பிரையண்ட் நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று (4.6.2025) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்