ஆபாச பேச்சு - நாதக ஆதரவாளர் கைது

ஆபாச பேச்சு தொடர்பாக நாதக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-07-16 15:44 IST

சென்னை,

திராவிடர் கழக நிர்வாகி மதிவதனி குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் சாரங்கபாணி கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூப் சேனலில் மதிவதனி குறித்து ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் விதமாகவும் பேசியது தொடர்பாக கோவை மாநகர காவல்துறையில் திராவிடர் இயக்கத்தினர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சாரங்கபாணி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் ஓசூரில் இருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்