சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் 08.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர்: 6வது தெரு, ரயில் நிலைய சாலை , காமராஜர் நகர், மகாத்மா காந்தி 1 முதல் 9 வது தெரு வரை, 3 வது பிரதான சாலை, தண்ணீர் தொட்டி அருகில், தெற்கு கட்டம் 6 முதல் 9 வது தெற்கு கட்டம், 3 வது குறுக்கு தெரு, 2 வது பிரதான சாலை, 2 வது குறுக்கு தெரு, 9 முதல் 11 வது குறுக்கு தெரு, பிரிவு 1 தெற்கு கட்டம் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.