சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - இருவர் கைது
இந்த விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். ஆலையில் உள்ள 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலை மேலாளர் உள்பட இரண்டு பேரை போலீசர் கைது செய்துள்ளனர்.