தங்க கடத்தல் வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு மீது நாளை( மார்ச் 14ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
ஈஷா மையம், ஜக்கி வாசுதேவ் குறித்த யூடியூபர் ஷ்யாம் மீரா சிங்கின் வீடியோக்களை நீக்க கூகுள், எக்ஸ், மெட்டா நிறுவனங்களுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். டாக்டர் பாலமுருகன், அவரது மனைவி வழக்கறிஞர் சுமதி, இரு மகன்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.