ஆவடி அருகே ரெயில் மோதி இருவர் பலி

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-06-15 20:48 IST

சென்னை,

ஆவடி அருகே ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க இருவர் முயற்சி செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த தண்டவாளத்தில் வந்த ரெயில் மோதி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இறந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இறந்தவர்கள் செங்கல் சூளையில் பணிபுரிந்த அன்பு (வயது 60),வேல்முருகன் (42) என அடையாளம் காணப்பட்டனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்