தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.;

Update:2025-10-27 15:56 IST

சென்னை,

உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டிமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

உலகச் செயல்முறை மருத்துவ (Occupational Therapy) நாளில், மாண்புடனும் சுதந்திரமாகவும் மக்கள் செயல்பட உதவும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

நமது திராவிட மாடல் அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ – ஒருங்கிணைந்த சேவை மையம், ஆட்டிசம் பாதித்தோருக்கான சிறப்புத் திறன் மையம் ஆகியவற்றைத் தொடங்கி இந்தச் செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறது. அக்கறை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, ஒவ்வொரு தனிநபருக்கும் வாய்ப்பு கொண்ட தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்