1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு எப்போது? வெளியான முக்கிய தகவல்
1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
காலாண்டு தேர்வு எப்போது தொடங்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு தேர்வை எதிர்கொள்ளும் மாணவ-மாணவிகளும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இருந்து வந்தது.
இந்த நிலையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டணையை பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 17-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரையிலும், 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும் காலாண்டு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி, 26-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே தேதிகளில் துவங்கி, காலாண்டு தேர்வு முடிவடையும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் -2 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10-ம் தேதி துவங்கி, 25 ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் பிளஸ் -2 வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வுகள் நடைபெறும் என்றும், பிளஸ் -1 வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.