புரூனே சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

புரூனே தருஸ்ஸலாம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update:2024-09-03 16:11 IST

இந்தியா - புரூனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக இன்று காலை புரூனே புறப்பட்டு சென்றார். அங்கு புரூனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதிக்க உள்ளார். இதன்மூலம் புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

புரூனே தருஸ்ஸலாம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனே தலைநகர் பண்டார் செரி பெகவான் பகுதியில் அவர் தங்கவுள்ள ஹோட்டலில் இந்திய வம்சாவளியினர் நம் தேசியக்கொடியுடன் நின்று, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்