பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
சமீபத்தில், பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா, குவைத் ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.;
ஓமன்,
2 நாள் பயணமாக பிரதமர் மோடி ஓமன் நாட்டுக்கு சென்றுள்ளார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஓமன்’ என்ற விருது வழங்கப்பட்டது. இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இவ்விருதை பிரதமருக்கு வழங்கினார். இத்துடன் 28 வெளிநாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார். சமீபத்தில், அவருக்கு எத்தியோப்பியா, குவைத் ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.