பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன்(73) உடல்நலக்குறைவால் காலமானார்.;

Update:2024-12-15 22:39 IST

வாஷிங்டன்,

இந்தியாவை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்தார்.

உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசேன் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இதனிடையே, 73 வயதான ஜாகிர் உசேன் தற்போது அமெரிக்காவில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஜாகிர் உசேனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நேற்று இரவு தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவலை குடும்பத்தினர் மறுத்தனர்.  ஜாகிர் உசேன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தனர். எனினும்,  சில மணி நேரங்கள் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து  விட்டதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.  ஜாகிர் உசேன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்