கோவைக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

'கோவை ரைசிங்' என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Update: 2024-04-16 12:57 GMT

கோவை,

தி.மு.க. சார்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 'கோவை ரைசிங்' என்ற தலைப்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்.

தி.மு.க. வேட்பாளரின் தேர்தல் அறிக்கையின் முக்கியம் அம்சங்கள் பின்வருமாறு,

*கோவையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மாசு கட்டுப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஏரிகளில் கழிவு நீர் கலப்பதும் தடுக்கப்படும்.

*கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும்.

*கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். முதல் கட்ட பணிகள் உரிய கால நேரத்திற்குள் தொடங்கி முடிவடையும். சிறுவாணி, பில்லூர் ஆறுகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

*விசைத்தறி வளர்ச்சி கவுன்சில் உருவாக்கப்பட்டு மின்சார செலவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளும் கவனித்துத் தீர்க்கப்படும்.

*பம்புசெட் மற்றும் உதிரிபாகத் தொழில்களில் உள்ள ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

*கோழிப் பண்ணை விவசாயிகளின் தீவனம், மின்சாரம் மற்றும் இதர பிரச்சினைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்க்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்