ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் எவை..?

நடப்பு ஆசிய கோப்பையின் சூப்பர்4 சுற்று நாளை ஆரம்பமாக உள்ளது.;

Update:2025-09-19 08:01 IST

துபாய்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். இதன் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைய உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவடைவதற்கு முன்பே சூப்பர்4 சுற்றுக்கு 4 அணிகள் தகுதிபெற்று விட்டன. அதன்படி 'ஏ' பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளும் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதனையடுத்து சூப்பர்4 சுற்று நாளை தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இருந்து தகுதி பெற்ற இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. பின்னர் 21-ம் தேதி நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இருந்து தகுதி பெற்றுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்