ஆசிய கோப்பை: டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சு தேர்வு
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.;
Image Courtesy: @ACCMedia1
துபாய், ,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இதுவரை 9 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி மட்டும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஹாங்காங், ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - யுஏஇ அணிகள் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம் காரணமாக இன்றைய ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இதன் காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.