சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: நடுவரின் விவரங்களை வெளியிட்ட ஐ.சி.சி.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கான நடுவர்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.;
image courtesy: ICC
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் லீக் மற்றும் அரைஇறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வருகிற 9-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோத உள்ளன.
இந்நிலையில் இந்த போட்டிக்கான நடுவர்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
நடுவர்கள் விவரம்:-
கள நடுவர்கள்: பால் ரீபெல் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்
3-வது நடுவர்: ஜோயல் வில்சன்
4-வது நடுவர்: குமார் தர்மசேனா
போட்டி நடுவர்: ரஞ்சன் மதுகல்லே