இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

மழை காரணமாக இறுதிப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.;

Update:2025-11-02 16:39 IST

மும்பை,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

இதனிடையே நவிமும்பையில் மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டிகான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மழை நின்றதையடுத்து 3 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த ஆட்டம் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் கால தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்