குல்பாடின் தேர்வு செய்த இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒருங்கிணைந்த லெவன் அணி... ரோகித், தோனிக்கு இடமில்லை

குல்பாடின் தேர்வு செய்த அணிக்கு ரஷித் கானை கேப்டனாக நியமித்துள்ளார்.;

Update:2025-08-09 16:59 IST

காபூல்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான குல்பாடின் நைப் இந்தியா-ஆப்கானிஸ்தான் வீரர்களை கொண்டு ஒருங்கிணைந்த ஆல் டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்த அணிக்கு ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கானை கேப்டனாக நியமித்துள்ளார்.

ஆனால் அந்த அணியில் இந்தியாவின் சிறந்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் மகேந்திரசிங் தோனிக்கு இடமளிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

குல்பாடின் நைப் தேர்வு செய்த இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒருங்கிணைந்த அணி விவரம்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, முகமது நபி, ஹர்திக் பாண்ட்யா, அஸ்மதுல்லா ஓமர்சாய்/ரவீந்திர ஜடேஜா, ரஷித் கான் (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக். 

Tags:    

மேலும் செய்திகள்