போட்டி முடிந்த பிறகு கைகொடுக்காமல் சென்ற இந்தியா - பாக். வீரர்கள்

பஹல்காம் தாக்குதல் - பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் போட்டி நடந்ததால் டாசிலும், போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கை கொடுக்காமல் புறக்கணித்தனர்.;

Update:2025-09-15 00:15 IST

துபாய்,

ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. .துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது..

எளிய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த நிலையில், ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்குவதைத் இந்திய வீரர்கள் தவிர்த்தனர்.இந்திய வீரர்கள் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்