இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய பெயரில் கோப்பை

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளது.;

Update:2025-06-06 12:45 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை புதிய பெயரில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக 2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 'பட்டோடி' கோப்பை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இனி வரும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அந்த பெயர் மாற்றப்பட்டு 'தெண்டுல்கர்- ஆண்டர்சன்' பெயரில் கோப்பை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ஜாம்பவான் வீரர்களான சச்சின் தெண்டுல்கர் (இந்தியா) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சனை (இங்கிலாந்து) கவுரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்