டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை

மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.;

Update:2025-06-14 21:00 IST

சேலம்,

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 11-வது ஆட்டத்தில் மதுரை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

திண்டுக்கல் அணியின் அபார பந்துவீச்சால் மதுரை அணி ரன்கள்குவிக்க திணறியது. அத்துடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரகுமான் 50 ரன்கள் எடுத்தார். சந்திரசேகர், பெரியசாமி ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்க உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்