விஜய் ஹசாரே கோப்பை: தேவ்தத் படிக்கல் சதம்...கர்நாடகா அசத்தல் வெற்றி
கர்நாடக அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது;
ஆமதாபாத்.
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் கர்நாடகா, திரிபுரா அணிகள் மோதின. இதில், முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் கர்நாடக அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து 108 ரன்கள் சேர்த்தார். நடப்பு தொடரில் படிக்கல் அடித்த 4-வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து ஆடிய திரிபுரா அணி 49 ஓவரில் 252 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் கர்நாடக அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.