உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர்: இன்று தொடக்கம்

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.;

Update:2025-07-18 10:00 IST

image courtesy:twitter/@WclLeague

பர்மிங்காம்,

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இன்று தொடங்க உள்ளது. ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் மீண்டும் விளையாட உள்ளதால் இந்த தொடர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்த சீசன் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம், நார்தாம்டன், லெய்செஸ்டர் மற்றும் லீட்ஸ் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளான இன்று பர்மிங்காமில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி, ஷாகித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்சை எதிர்கொள்கிறது.

இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை 20-ம் தேதி எதிர்கொள்கிறது. அதன்பின் 22-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும், 26-ம் தேதி ஆஸ்திரேலியாவையும், 27-ம் தேதி இங்கிலாந்தையும், 29-ம் தேதி வெஸ்ட் இண்டீசையும் எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்