மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு
விழுப்புரம்,
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் எல்.சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:–
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதியும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதியும் செய்து தர வேண்டும். போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.
முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்த வேண்டும். மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்யவும், விழாக்காலங்களில் 2 நாட்களிலும் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும்.
கண்காணிப்பு காமிராக்கள்இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கோவில் அலுவலகம், புறக்காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்க வேண்டும். கோவிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் கண்டுகளிக்க செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன வீடியோ வாகனம் மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்சுகள் கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) சரயூ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் உள்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.