கோத்தகிரியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டுக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற போக்குவரத்து சங்க செயலாளர் விஸ்வநாதன், தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும்.‘
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும். 300 முதல் 400 நாட்கள் பணி செய்து உள்ள ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சிவபிரகாசம் நன்றி கூறினார்.