மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மீனவர் சாவு


மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மீனவர் சாவு
x
தினத்தந்தி 19 March 2017 4:00 AM IST (Updated: 19 March 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மீனவர் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த நாகூர் சம்பாதோட்டம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது55). மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில், அவரும், அதே பகுதியை சேர்ந்த தங்கதுரை (50), ரமேஷ் (30), ரங்கையன் (55) ஆகிய 4 பேரும் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நாகூரில் இருந்து சுமார் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது.

இதில் படகு தத்தளித்ததால் மாரியப்பனும், தங்கதுரையும் நிலை தடுமாறி கடலில் விழுந்தனர். உடனே கடலில் விழுந்த 2 பேரையும் சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கரையில் வந்து பார்த்தபோது மாரியப்பன் இறந்திருந்தது தெரிய வந்தது. கழுத்தில் பலத்த காயமடைந்திருந்த தங்கதுரை உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே மீனவர்கள் தங்கதுரையை நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


Next Story