ஆம்பூர் அருகே மலைப்பகுதியில் உள்ள வற்றாத கொண்டப்பட்டியான் சுனை ஏரியை சீரமைக்க வேண்டும்


ஆம்பூர் அருகே மலைப்பகுதியில் உள்ள வற்றாத கொண்டப்பட்டியான் சுனை ஏரியை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ள வற்றாத கொண்டப்பட்டியான் சுனை ஏரியை சீரமைக்க வேண்டும்

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே ஊட்டல் தேவஸ்தானம் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிக்கலமலைக்கும் ஜவ்வூட்டல் மலைக்கும் இடையே பரந்தபாறை என்ற பகுதியில் கொண்டப்பட்டியான் சுனை ஏரி உள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலில் பல்வேறு நீர்நிலைகள் வறண்டு கிடக்க, ஆயிரம் அடிக்கும் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்தாலும் அறவே நீர் எட்டி பார்க்காத இந்த வறண்ட காலத்தில் மலையின் மேல் வனவிலங்குகளுக்கும், கால்நடைகளுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது கொண்டப்பட்டியான் சுனை ஏரி.

இந்த சுனை ஏரியானது இரண்டு பக்கம் மேடான பாறை பகுதியும், இரண்டு பக்கம் கட்டு கற்களாலும் உள்ளது. 10 அடி அகலத்திலும், 100 மீட்டருக்கு மேல் நீளத்திலும் உள்ள இந்த நீர்நிலை எந்த காலத்திலும் வறண்டதே இல்லை என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

கால்நடை மேய்ப்வர்கள் அனைவரும் மதிய நேரத்தில் தண்ணீர் தாகம் தீர்க்க இங்குதான் வந்து செல்வார்களாம். இந்த ஏரியை சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட பாறை குடில்கள் உள்ளன.

வனப்பகுதியில் நீர்நிலைகளை மேம்படுத்த தண்ணீர் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வனத்துறை செய்து வந்தாலும் எந்த பயனும் கிடைக்கவில்லை. எனவே, எந்த காலத்திலும் வற்றாத நீரை கொண்டுள்ள ஏரியை தூர்வாரி, வனவிலங்குகளின் தாகம் தீர்க்கவும், அதன் அருகில் உள்ள பாறை குடில்களை பேணிகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story