மறைமலைநகரில் நாளை மின்தடை

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மறைமலைநகர், தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, திருக்கச்சூர், பேரமனூர், சிங்கப்பெருமாள் கோவில், செங்குன்றம், மெல்ரோசாபுரம், கோவிந்தாபுரம், சட்டமங்களம், கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, நந்திவரம், மகாலட்மிநகர், கோவிந்தராஜபுரம், மாடம்பாக்கம், தைலாவரம், ஊரப்பாக்கம், ஆதனூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் பேசாபிமானன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story