டிராக்டரை ஜப்தி செய்ய வந்த போது வங்கி ஊழியர்களுடன் தள்ளுமுள்ளு; விவசாயி மயங்கி விழுந்து சாவு

திருவண்ணாமலை அருகே தானிப்பாடியில் கடனுக்காக டிராக்டரை ஜப்திசெய்ய வந்த வங்கி ஊழியர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது விவசாயி மயங்கி விழுந்து இறந்தார். அவருடைய உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தண்டராம்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியை அடுத்த போந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 55), விவசாயி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூரில் உள்ள ஒரு வங்கியில் டிராக்டர் வாங்குவதற்காக விவசாய கடன் பெற்று உள்ளார். தொடர்ந்து 4 ஆண்டுகள் தவணை தொகையை செலுத்தி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அவரால் தவணை தொகையை செலுத்த முடியவில்லை. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் வாராக்கடன் பட்டியலில் ஞானசேகரன் பெயரை சேர்த்தது. மேலும் கடன் தொகை வசூலிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் ஏஜென்சியை சேர்ந்தவர்கள் என 4 பேர் ஞானசேகரனின் வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவர்கள், வங்கி கடன் வசூலிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், டிராக்டரை ஜப்தி செய்யப்போவதாகவும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானசேகரன் நெல் அறுவடை முடிந்ததும் 2 மாதங்களில் தவணை தொகையை செலுத்துவதாக கூறியுள்ளார். இதை ஏற்காத அவர்கள் டிராக்டரை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. அந்த சமயம் திடீரென ஞானசேகரன் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை பிரேத பரிசோதனைக்குப்பிறகு, ஞானசேகரனின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். ஞானசேகரன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பிய வங்கி அதிகாரி மீது வழக்குப்பதிவுசெய்ய வேண்டும். ஞானசேகரனின் சாவு வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். அவருடைய குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவருடைய விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள் ஞானசேகரனின் உடலை வாங்க மறுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.
மதியம் சுமார் 2 மணியளவில் தானிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசு, ஞானசேகரனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் பிரேத பரிசோதனை அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைளை நிறைவேற்றினால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி இரவுவரை உடலைவாங்க மறுத்து விட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியை அடுத்த போந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 55), விவசாயி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூரில் உள்ள ஒரு வங்கியில் டிராக்டர் வாங்குவதற்காக விவசாய கடன் பெற்று உள்ளார். தொடர்ந்து 4 ஆண்டுகள் தவணை தொகையை செலுத்தி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அவரால் தவணை தொகையை செலுத்த முடியவில்லை. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் வாராக்கடன் பட்டியலில் ஞானசேகரன் பெயரை சேர்த்தது. மேலும் கடன் தொகை வசூலிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் ஏஜென்சியை சேர்ந்தவர்கள் என 4 பேர் ஞானசேகரனின் வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவர்கள், வங்கி கடன் வசூலிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், டிராக்டரை ஜப்தி செய்யப்போவதாகவும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானசேகரன் நெல் அறுவடை முடிந்ததும் 2 மாதங்களில் தவணை தொகையை செலுத்துவதாக கூறியுள்ளார். இதை ஏற்காத அவர்கள் டிராக்டரை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. அந்த சமயம் திடீரென ஞானசேகரன் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை பிரேத பரிசோதனைக்குப்பிறகு, ஞானசேகரனின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். ஞானசேகரன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பிய வங்கி அதிகாரி மீது வழக்குப்பதிவுசெய்ய வேண்டும். ஞானசேகரனின் சாவு வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். அவருடைய குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவருடைய விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள் ஞானசேகரனின் உடலை வாங்க மறுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.
மதியம் சுமார் 2 மணியளவில் தானிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசு, ஞானசேகரனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் பிரேத பரிசோதனை அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைளை நிறைவேற்றினால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி இரவுவரை உடலைவாங்க மறுத்து விட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story