புதுவையில் பட்டப்பகலில் பயங்கரம்: ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை

புதுவையில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடியை வெட்டிக் கொலை செய்து விட்டு காரில் தப்பினர். அப்போது அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய அவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
புதுச்சேரி,
சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்(வயது 48). பிரபல ரவுடி. இவர் மீது தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் புதுவை வந்து கோவிந்தசாலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இங்கு அவர் நெய்யை மொத்தமாக கொள்முதல் செய்து பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.
நேற்று காலை 8.30 மணியளவில் கொளஞ்சிநாதன் தனது மகளை புஸ்சி வீதியில் உள்ள ஒரு பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பினார். புதுதெரு அருகே வந்த போது அவரை பின்தொடர்ந்து ஒரு கார் வந்தது. மோட்டார் சைக்கிளிலும் ஒருவர் வந்தார். திடீரென்று அந்த கார் மோதியதில் நிலைதடுமாறி கொளஞ்சிநாதன் கீழே விழுந்தார்.
இதை எதிர்பாராத அவர் சுதாரித்து எழுவதற்குள் காரில் இருந்து இறங்கியவர்கள் கொளஞ்சிநாதனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். மோட்டார் சைக்கிளில் வந்தவரும் அவரை வெட்டினார்.
இதில் காயமடைந்த கொளஞ்சிநாதன் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக அவரை வெட்டித்தள்ளினர். இதில் பலத்த காயம் அடைந்த கொளஞ்சிநாதன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டது. மோட்டார் சைக்கிளில் வந்தவரும் தப்பிச் சென்றார்.
பட்டப்பகலில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய தகவல் அறிந்து ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த கொளஞ்சிநாதனை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கொளஞ்சிநாதனை கொலை செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி- கடலூர் சாலையில் அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியபடி மின்னல் வேகத்தில் காரில் வந்தனர். இதை அறிந்த புதுச்சேரி போலீசார் அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்தனர்.
குற்றவாளிகள் கடலூர் மாவட்ட எல்லைக்குள் செல்வார்கள் என்று கருதிய புதுச்சேரி போலீஸ் உயர் அதிகாரிகள் இது பற்றி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலூர் மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். அதற்குள் குற்றவாளிகள் ஆல்பேட்டை சோதனைச்சாவடி வழியாக கடலூருக்குள் வேகமாக வந்தனர்.
அவர்களை பின்தொடர்ந்து புதுச்சேரி போலீசாரும் வந்தனர். காரில் அதிவேகமாக வந்த அந்த கும்பல் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, கிளை சிறைச்சாலை, நீதிபதிகள் குடியிருப்பு சாலை வழியாக சில்வர் பீச் ரோட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வன்னியர்பாளையம், புதுப்பாளையம் வழியாக உழவர் சந்தை அருகில் வந்தனர். வரும்போது தாறுமாறாக காரை ஓட்டி வந்த அவர்கள், ஆங்காங்கே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களில் மோதி அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியபடி வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவர்களை மோட்டார் சைக்கிள்களில் துரத்தினர்.
இதனிடையே கார் ஒன்று அதிவேகமாக செல்வதை பார்த்த ஆயுதப்படை போலீசார், அந்த காரை துரத்தி வந்தனர். கடலூர்-சிதம்பரம் சாலையில் உழவர் சந்தை அருகில் சென்றதும் போக்குவரத்து நெரிசலில் அவர்களால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. அதற்குள் அங்கு வந்த ஆயுதப்படை போலீசார் அந்த கும்பலை மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவன், தனது கையில் வைத்திருந்த கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டினான்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸ் பிடியில் இருந்த 3 பேரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். காரின் முன் பக்க கண்ணாடியையும் அவர்கள் உடைத்தனர். அவர்கள் அணிந்திருந்த சட்டையை ஆவேசத்துடன் கிழித்தெறிந்தனர். தாக்குதலில் அவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இந்த களேபரத்துக்கிடையே காரில் வந்தவர்களில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிடிபட்ட 3 பேரையும் கடலூர் ஆயுதப்படை போலீசாரும், புதுச்சேரி போலீசாரும் ஒரு ஆட்டோவில் ஏற்றி புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வர முற்பட்டனர். அப்போதும் அவர்கள் 3 பேரையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
பின்னர் பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்கள் 3 பேரையும் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்கள் வந்த காரையும், அதில் ரத்தக்கறை படிந்திருந்த கத்தி, அரிவாள், கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து பிடிபட்ட 3 பேரிடம் கடலூர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் சித்தலூர் மலைச்சாமி மகன் சேவற்கொடி (30), வைரம்பட்டி பண்ணமுத்து மகன் சிவா என்கிற பரமசிவம் (25), கார் டிரைவரான நெல்மண்டி தெரு ராமச்சந்திரன் மகன் சேகர் (26) ஆகிய 3 பேர் என்றும், தப்பி ஓடியது மானாமதுரை உடைகுளம் கண்ணன் (26), மணி (29), நாட்டரசன்பேட்டை அழகர் ஆகிய 3 பேர் என்றும் தெரிய வந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு சேவற்கொடியின் அண்ணன் சுதாகரை ஓசூரில் வைத்து கொளஞ்சிநாதன் கொலை செய்து விட்டு, தலைமறைவாக புதுச்சேரியில் தங்கி இருந்ததும், அதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக கொளஞ்சிநாதனை சேவற்கொடி தலைமையிலான இந்த கும்பல் கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
3 பேர் பிடிபட்ட சம்பவம் அறிந்ததும் புதுச்சேரி கிழக்கு போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி, ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் பிடிபட்ட 3 பேரையும், கடலூர் புதுநகர் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் ஆயுதங்களும் புதுச்சேரி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக அவர்கள் 3 பேரையும் போலீசார் புதுச்சேரி அழைத்து வந்தனர். தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். சினிமா காட்சியை போல் நடந்த இந்த சம்பவத்தால் புதுச்சேரியிலும், கடலூரிலும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்(வயது 48). பிரபல ரவுடி. இவர் மீது தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் புதுவை வந்து கோவிந்தசாலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இங்கு அவர் நெய்யை மொத்தமாக கொள்முதல் செய்து பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.
நேற்று காலை 8.30 மணியளவில் கொளஞ்சிநாதன் தனது மகளை புஸ்சி வீதியில் உள்ள ஒரு பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பினார். புதுதெரு அருகே வந்த போது அவரை பின்தொடர்ந்து ஒரு கார் வந்தது. மோட்டார் சைக்கிளிலும் ஒருவர் வந்தார். திடீரென்று அந்த கார் மோதியதில் நிலைதடுமாறி கொளஞ்சிநாதன் கீழே விழுந்தார்.
இதை எதிர்பாராத அவர் சுதாரித்து எழுவதற்குள் காரில் இருந்து இறங்கியவர்கள் கொளஞ்சிநாதனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். மோட்டார் சைக்கிளில் வந்தவரும் அவரை வெட்டினார்.
இதில் காயமடைந்த கொளஞ்சிநாதன் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக அவரை வெட்டித்தள்ளினர். இதில் பலத்த காயம் அடைந்த கொளஞ்சிநாதன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டது. மோட்டார் சைக்கிளில் வந்தவரும் தப்பிச் சென்றார்.
பட்டப்பகலில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய தகவல் அறிந்து ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த கொளஞ்சிநாதனை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கொளஞ்சிநாதனை கொலை செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி- கடலூர் சாலையில் அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியபடி மின்னல் வேகத்தில் காரில் வந்தனர். இதை அறிந்த புதுச்சேரி போலீசார் அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்தனர்.
குற்றவாளிகள் கடலூர் மாவட்ட எல்லைக்குள் செல்வார்கள் என்று கருதிய புதுச்சேரி போலீஸ் உயர் அதிகாரிகள் இது பற்றி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலூர் மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். அதற்குள் குற்றவாளிகள் ஆல்பேட்டை சோதனைச்சாவடி வழியாக கடலூருக்குள் வேகமாக வந்தனர்.
அவர்களை பின்தொடர்ந்து புதுச்சேரி போலீசாரும் வந்தனர். காரில் அதிவேகமாக வந்த அந்த கும்பல் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, கிளை சிறைச்சாலை, நீதிபதிகள் குடியிருப்பு சாலை வழியாக சில்வர் பீச் ரோட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வன்னியர்பாளையம், புதுப்பாளையம் வழியாக உழவர் சந்தை அருகில் வந்தனர். வரும்போது தாறுமாறாக காரை ஓட்டி வந்த அவர்கள், ஆங்காங்கே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களில் மோதி அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியபடி வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவர்களை மோட்டார் சைக்கிள்களில் துரத்தினர்.
இதனிடையே கார் ஒன்று அதிவேகமாக செல்வதை பார்த்த ஆயுதப்படை போலீசார், அந்த காரை துரத்தி வந்தனர். கடலூர்-சிதம்பரம் சாலையில் உழவர் சந்தை அருகில் சென்றதும் போக்குவரத்து நெரிசலில் அவர்களால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. அதற்குள் அங்கு வந்த ஆயுதப்படை போலீசார் அந்த கும்பலை மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவன், தனது கையில் வைத்திருந்த கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டினான்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸ் பிடியில் இருந்த 3 பேரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். காரின் முன் பக்க கண்ணாடியையும் அவர்கள் உடைத்தனர். அவர்கள் அணிந்திருந்த சட்டையை ஆவேசத்துடன் கிழித்தெறிந்தனர். தாக்குதலில் அவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இந்த களேபரத்துக்கிடையே காரில் வந்தவர்களில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிடிபட்ட 3 பேரையும் கடலூர் ஆயுதப்படை போலீசாரும், புதுச்சேரி போலீசாரும் ஒரு ஆட்டோவில் ஏற்றி புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வர முற்பட்டனர். அப்போதும் அவர்கள் 3 பேரையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
பின்னர் பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்கள் 3 பேரையும் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்கள் வந்த காரையும், அதில் ரத்தக்கறை படிந்திருந்த கத்தி, அரிவாள், கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து பிடிபட்ட 3 பேரிடம் கடலூர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் சித்தலூர் மலைச்சாமி மகன் சேவற்கொடி (30), வைரம்பட்டி பண்ணமுத்து மகன் சிவா என்கிற பரமசிவம் (25), கார் டிரைவரான நெல்மண்டி தெரு ராமச்சந்திரன் மகன் சேகர் (26) ஆகிய 3 பேர் என்றும், தப்பி ஓடியது மானாமதுரை உடைகுளம் கண்ணன் (26), மணி (29), நாட்டரசன்பேட்டை அழகர் ஆகிய 3 பேர் என்றும் தெரிய வந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு சேவற்கொடியின் அண்ணன் சுதாகரை ஓசூரில் வைத்து கொளஞ்சிநாதன் கொலை செய்து விட்டு, தலைமறைவாக புதுச்சேரியில் தங்கி இருந்ததும், அதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக கொளஞ்சிநாதனை சேவற்கொடி தலைமையிலான இந்த கும்பல் கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
3 பேர் பிடிபட்ட சம்பவம் அறிந்ததும் புதுச்சேரி கிழக்கு போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி, ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் பிடிபட்ட 3 பேரையும், கடலூர் புதுநகர் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் ஆயுதங்களும் புதுச்சேரி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக அவர்கள் 3 பேரையும் போலீசார் புதுச்சேரி அழைத்து வந்தனர். தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். சினிமா காட்சியை போல் நடந்த இந்த சம்பவத்தால் புதுச்சேரியிலும், கடலூரிலும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story