திருவொற்றியூரில் குடும்பத்தகராறில் பெயிண்டர் தற்கொலை

திருவொற்றியூரில் குடும்பத்தகராறில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தகராறு திருவொற்றியூர் சாத்தாங்காடு அம்பேத்கர் நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 30). பெயிண்டர். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு லோகேஷ், அரிஷ் என 2 ம
திருவொற்றியூர்,
திருவொற்றியூரில் குடும்பத்தகராறில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர் சாத்தாங்காடு அம்பேத்கர் நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 30). பெயிண்டர். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு லோகேஷ், அரிஷ் என 2 மகன்கள் உள்ளனர். சுந்தருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர்.
நேற்று காலை நந்தினி எழுந்து வாசலில் கோலம் போட சென்றார். கோலம் போட்டு விட்டு திரும்பி வந்தபோது, சுந்தர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி உடனே அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சாத்தாங்காடு போலீசார் விரைந்து வந்து, சுந்தரின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது குடும்பத்தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.