புதுவை சட்டசபையில் நாராயணசாமி கொடியேற்றினார்

புதுவை சட்டசபையில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார்.
புதுச்சேரி,
புதுவையில் உப்பளம் இந்திராகாந்தி மைதானத்தில் குடியரசு தினவிழா நடந்தது. விழாவில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடியேற்றி வைத்தார். அங்கு விழா முடிந்ததும் சட்டசபை வளாகத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
உழவர்கரை தொகுதி மரியாள் நகர் மெயின்ரோடு பகுதியில் நடந்த விழாவில் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலகத்தில் இருந்த காந்தி, காமராஜர் மற்றும் தலைவர்களின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், முன்னாள் வாரிய தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை கோர்ட்டு வளாகத்தில் தலைமை நீதிபதி தனபால் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதன்மை குற்றவியல் நீதிபதி பத்மநாபன், 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி செல்வநாதன், வக்கீல் சங்க தலைவர் திருக்கண்ண செல்வன், செயலாளர் தனசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் சத்தியேந்திரசிங் துர்சாவத் தேசியக்கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தனி அதிகாரி கந்தசாமி, வருவாய் அதிகாரி முத்துமீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் குர்மீத் சிங் தேசியக்கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து பார்வையற்ற மாணவர்கள் மிக எளிதில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்ப கருவிகளை வழங்கினார்.
விழாவில் பதிவாளர் தரணிக்கரசு, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நடராஜன், நிதி அதிகாரி மாளபிகா டியோ, நூலகர் சம்யுக்தா, இணை பதிவாளர் சித்ரா, துணை பதிவாளர் முரளிதாசன், போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஜிப்மரில் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா தேசியக்கொடியேற்றினார். விழாவில் பேராசிரியர்கள், டாக்டர்கள் கலந்துகொண்டனர். மேலும் மாணவ, மாணவிகளின் தேசபக்தி பாடல்களும், கலைநிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெற்றன.
புதுவையில் உப்பளம் இந்திராகாந்தி மைதானத்தில் குடியரசு தினவிழா நடந்தது. விழாவில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடியேற்றி வைத்தார். அங்கு விழா முடிந்ததும் சட்டசபை வளாகத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
உழவர்கரை தொகுதி மரியாள் நகர் மெயின்ரோடு பகுதியில் நடந்த விழாவில் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலகத்தில் இருந்த காந்தி, காமராஜர் மற்றும் தலைவர்களின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், முன்னாள் வாரிய தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை கோர்ட்டு வளாகத்தில் தலைமை நீதிபதி தனபால் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதன்மை குற்றவியல் நீதிபதி பத்மநாபன், 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி செல்வநாதன், வக்கீல் சங்க தலைவர் திருக்கண்ண செல்வன், செயலாளர் தனசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் சத்தியேந்திரசிங் துர்சாவத் தேசியக்கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தனி அதிகாரி கந்தசாமி, வருவாய் அதிகாரி முத்துமீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் குர்மீத் சிங் தேசியக்கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து பார்வையற்ற மாணவர்கள் மிக எளிதில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்ப கருவிகளை வழங்கினார்.
விழாவில் பதிவாளர் தரணிக்கரசு, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நடராஜன், நிதி அதிகாரி மாளபிகா டியோ, நூலகர் சம்யுக்தா, இணை பதிவாளர் சித்ரா, துணை பதிவாளர் முரளிதாசன், போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஜிப்மரில் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா தேசியக்கொடியேற்றினார். விழாவில் பேராசிரியர்கள், டாக்டர்கள் கலந்துகொண்டனர். மேலும் மாணவ, மாணவிகளின் தேசபக்தி பாடல்களும், கலைநிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெற்றன.
Related Tags :
Next Story